மாரியப்பா நகரில் தாம்பூலத்துடன் கூடிய அழைப்பிதழ் வழங்குதல்

83பார்த்தது
மாரியப்பா நகரில் தாம்பூலத்துடன் கூடிய அழைப்பிதழ் வழங்குதல்
பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் கடலூர் மாவட்டம் சிதம்பரம்
வட்டம் மாரியப்பா நகர் பகுதியில் பொதுமக்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று தாம்பூலத்துடன்
கூடிய அழைப்பிதழ் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ம. இராஜசேகரன், சிதம்பரம் சார் ஆட்சியர் ரஷ்மி ராணி ஆகியோர் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி