ஆர்.சி ரத்து- விதிமுறை அமல்படுத்துவதில் தாமதம்!

55பார்த்தது
ஆர்.சி ரத்து- விதிமுறை அமல்படுத்துவதில் தாமதம்!
ஜூன் 1 முதல் சிறார் வாகனம் ஓட்டினால் ரூ.25,000 அபராதம், 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட மாட்டாது, வாகனத்தின் ஆர்.சி. ரத்து என மத்திய போக்குவரத்து அமைச்சகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த விதியினை தமிழ்நாட்டில் அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்துத்துறை சார்பில் முறையாக அரசாணை வெளியிடாததால் சட்டத்தை அமல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, ஜூன் 4-க்கு பிறகு இந்த நடைமுறை அமல்படுத்தப்பட வாய்யப்புள்ளது என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி