‘ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி’ - தேர்தல் ஆணையம்

50பார்த்தது
‘ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி’ - தேர்தல் ஆணையம்
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜூன் 1) வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து, வருகிற ஜூன் 4ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில், பல கட்ட வாக்குப்பதிவு வெற்றிகரமாக அமைந்ததாக தேர்தல் ஆணையம் மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. மேலும், இதற்காக வாக்காளர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்தி