கள்ளச்சாராயம்: ரூ.10 லட்சம் வழங்குவது தவறான முன்னுதாரணம்

577பார்த்தது
கள்ளச்சாராயம்: ரூ.10 லட்சம் வழங்குவது தவறான முன்னுதாரணம்
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு பேசிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், “கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவது எவ்வளவு பெரிய தீய முன்னுதாரணம் என்பதை உணர வேண்டும். இந்த நிலை மாற வேண்டும். பள்ளியில், கல்லூரியில் சேரும் காலத்தில், படிக்கும் காலத்தில் இளைஞர்கள் தொடர்ந்து நல்வழிப்படுத்தப்பட வேண்டும். 100 நாள் வேலை உறுதித் திட்டம் இளைஞர்களை சோம்பேறிகளாக ஆக்குகிறது” என்றார்.

தொடர்புடைய செய்தி