கொரோனா மீண்டும் பரவுகிறது.. முகக்கவசம் கட்டாயம்!

66பார்த்தது
கொரோனா மீண்டும் பரவுகிறது.. முகக்கவசம் கட்டாயம்!
சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா தொற்று பரவி வருகிறது. மே முதல் வாரத்தில் 13,700 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. அடுத்த வாரத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியது. மே 5 மற்றும் 11-க்கு இடைப்பட்ட வாரத்தில், கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 25,900 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பரவலைத் தொடர்ந்து, அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சிங்கப்பூர் சுகாதாரத் துறை பரிந்துரை செய்துள்ளது. அடுத்த 2 முதல் 4 வாரங்களில் இந்த நோய்த்தொற்று தீவிரமடைய வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி