டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்ளுடன் இன்று (மே 19) பாஜக அலுவலகத்தை முற்றுகையிட இருப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று கட்சி அலுவலகத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். இந்த நிலையில், தற்போது அலுவலகத்திற்கு முதலமைச்சர் கெஜ்ரிவால் விரைந்துள்ளார். தொடர்ந்து, டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி தொண்டர்கள் பாஜக தலைமை அலுவலகம் நோக்கி பேரணி நடத்த உள்ளனர்.