ஹரியானா மாநிலம் அம்பாலாவில் இன்று (மே 18) நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “ராணுவத்தில் ஊழல்களை புரிந்து நமது வீரர்களை ஏமாற்றியது காங்கிரஸ் கட்சி தான். போஃபர்ஸ், ஹெலிகாப்டர் ஊழல், நீர்மூழ்கிக்கப்பல் ஊழல் என நமது படைகளை காங்கிரஸ் பலவீனப்படுத்தியது. சுமார் 70 ஆண்டு காலமாக கையில் வெடிகுண்டுகளுடன் நமக்கு பாகிஸ்தான் தொல்லை கொடுத்து வந்தது. ஆனால், தற்போது பாகிஸ்தான் கையில் வெறும் யாசகம் கேட்கும் கிண்ணம் தான் உள்ளது” என்றார்.