வால்பாறை - Valparai

கோவை: மாநில பெண் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

கோவை, காளப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் சமூக நலத் துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் மாநில பெண் குழந்தைகள் தின விழா, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர் தலைமையில் நேற்று நடைபெற்றது. விழாவில் மாணவர், மாணவிகள் இணைந்து பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் பிரம்மாண்ட வடிவமைப்பை நிகழ்த்தி, கலாம்ஸ் வேல்டு ரெக்கார்ட் சாதனையை படைத்தனர். விழாவில் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பணவர், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குறைந்து வரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும், பெண் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்வதற்கும் தொடங்கப்பட்ட திட்டம் என்று கூறினார். மேலும், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் பங்கு சமூகத்தில் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டினார். பெண்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற பள்ளி, உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குவது அவசியம் என்றும், இதற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வீடியோஸ்


கோயம்புத்தூர்
Feb 26, 2025, 03:02 IST/கோயம்புத்தூர்
கோயம்புத்தூர்

கோவை: கொடநாடு வழக்கு -போலீஸ் அதிகாரி நேரில் ஆஜர்!

Feb 26, 2025, 03:02 IST
நீலகிரி மாவட்டம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவையில் உள்ள சி. பி. சி. ஐ. டி. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இதுவரை 245-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரிடம் வெளிநாட்டில் இருந்து பேசிய நபர் யார்? என்பது குறித்து இன்டர்போல் அமைப்பிடம் உதவி கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அதிகாரிகள் முன் மகேஷ்குமார் என்ற காவலர் நேற்று நேரில் ஆஜரானார். அவரிடம் சி. பி. சி. ஐ. டி. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். காவலர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த வழக்கின் விசாரணைக்கான தனிப்படையில் மகேஷ்குமார் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்தும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சயான் மற்றும் கனகராஜின் செல்போன்களை காவல்துறையிடம் ஒப்படைத்தது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.