குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானையால் பரபரப்பு!

56பார்த்தது
குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானையால் பரபரப்பு!
வால்பாறை எஸ்டேட் குடியிருப்பு பகுதியிள் நுழைந்த காட்டு யானையால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். வால்பாறை எஸ்டேட்டுகளில் ஏராளமான வனவிலங்குகள் இருக்கும் நிலையில் உணவு குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் நுழைவது வாடிக்கையாகி வருகிறது இந்நிலையில் வால்பாறை, பச்சைமலை ஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் நேற்று காலை நுழைந்த ஒற்றைக்காட்டு யானை நேற்று மாலை வரை அங்கிருந்த வாழை உள்ளிட்ட பல்வேறு மரங்களை சேத படுத்தியது. எஸ்டேட் தொழிலாளர்கள் யானையை விரட்ட முயன்றனர், முடியாததால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி