சிஆர்பிஎப் பயிற்சி அதிகாரிகளுக்கு வன பகுதியில் பயிற்சி

62பார்த்தது
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்த பாலமலை பகுதியில் இருந்து 300 சிஆர்பிஎப் பயிற்சி அதிகாரிகள், 15 குழுக்களாக பிரிந்து இன்று காலை 11 மணியளவில் அடர்ந்த காடுகளில் 7 நாட்கள் தங்கி காடுகள் பற்றிய பயிற்சிகளை மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் இன்று முகாமிட்ட சிஆர்பிஎப் பயிற்சி அதிகாரிகள் சுமார் 300 பேர் அடர்ந்த வன பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தலைநகர் டெல்லியில் இருந்து பல்வேறு பயிற்சிகளுக்காக கோவைக்கு வந்துள்ள சிஆர்பிஎப் வீரர்கள் 45 நாட்கள் கோவை ராக்கி பாளையம் பகுதியில் உள்ள இரானுவ பயிற்சி பள்ளி வளாகத்தில் பல்வேறு பயிற்சிகளை பெற்றனர்.

தொடர்புடைய செய்தி