வேறு ஒருவரை திருமணம் செய்த மனைவி; வாலிபர் தற்கொலை

2997பார்த்தது
வேறு ஒருவரை திருமணம் செய்த மனைவி; வாலிபர் தற்கொலை
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் லட்சுமண்குமார்(29). இவர் கோவை பொன்னையராஜபுரத்தில் தனது சகோதரர் சோகன்லால்(33) என்பவருடன் தங்கி இரும்பு கடையில் வேலை பார்த்து வந்தார். லட்சுமண் குமாருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு விமலா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு விமலா தனது கணவரை பிரிந்தார்.

பின்னர் அவர் வேறொருவரை திருமணம் செய்து கொண்டார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த லட்சுமண் குமார் வாழ்க்கையில் விரக்தியடைந்து நேற்று பொன்னையராஜபுரத்தில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வெறைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி