வங்கதேசத்தில் இந்துக்கள் மீது கடும் தாக்குதல்

83பார்த்தது
இந்து முன்னணி மாநில தலைவர் சுப்ரமணியம் அவர்கள் கோவை கோனியம்மன் கோவிலில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது
கடும் தாக்குதல்கள் நடத்துகின்றனர்.
அங்கே சிறுபான்மையாக இருக்கின்ற ஹிந்துக்கள் தங்களுடைய உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் பாரத நாட்டின் எல்லையில்
காத்து கிடக்கின்றனர்.
பெண்களும் குழந்தைகளும் பலவந்தமாக தாக்கப்படுகின்ற காட்சிகள் உலகம் முழுக்க எதிர்ப்பை உண்டாக்கி இருக்கிறது.
மதத்தின் பெயரால் வங்கதேசத்தில் நடைபெறும் இந்துக்களின் மீதான தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு இதில் உடனடியாக தலையிட்டு வங்கதேச இந்துக்களை பாதுகாக்க வேண்டும் என்றும் இந்து முன்னணி சார்பாக இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தோம்

தொடர்புடைய செய்தி