வீட்டில் புகுந்து செல்போன், பணம் திருடியவர் கைது

61பார்த்தது
வீட்டில் புகுந்து செல்போன், பணம் திருடியவர் கைது
கோவை செல்வபுரம் சொக்கம்புதூரை சேர்ந்தவர் ஷேக் ஆகாஷ் அலி(57). டெய்லர். இவர் நேற்று அதிகாலை கதவை பூட்டாமல் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது உள்ளே நைசாக நுழைந்த மர்ம ஆசாமி வீட்டில் இருந்த ரூ. 20 ஆயிரம் மற்றும் செல்போனை திருடி கொண்டு தப்பினார். காலையில் எழுந்ததும் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்த ஷேக் ஆகாஷ் அலி செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், திருட்டில் ஈடுபட்டது மேற்கு வங்கத்தை சேர்ந்த கச்சினா பால்தாஸ்(31) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி