போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

68பார்த்தது
கோவை கரும்புக்கடை பகுதியில்
சுதந்திர தினத்தை முன்னிட்டு போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது

கோவை கரும்புக்கடை பகுதியில் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு போதைப் பொருள் எதிர்ப்பு பிரச்சாரம் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் சார்ப்பில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக உதவி ஆணையாளர் அஜய் தங்கம் கலந்து கொண்டு மாணவர்கள், மாணவி முதல் பெரியவர்கள் வரை உதவி ஆணையாளர் முன்னிலையில் போதைப் பொருள் தடுப்பு குறித்து உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் சிறுபான்மை துறை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் முகமது ஹாரீஸ், இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட செயலாளர் முஹம்மது ஷபீர், இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட துணை தலைவர் முஹம்மது பசீர், மதரஸா தலைமை ஆசிரியர் அப்துல் அஜீஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் மாணவ, மாணவிகள் போதைப் பொருட்களுக்கு எதிராகவும் போதைப் பொருட்களினால் ஏற்படும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதனை தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் மாணவ, மாணவி மற்றும் பெரியவர்கள் போதைப் பொருட்களுக்கு எதிராக கையில் பதாகைகள் ஏந்தி கோஷமிட்டு ஊர்வலமாக வந்தனர்.

தொடர்புடைய செய்தி