கோவையில் களைகட்டும் கோவை அரசுப்பொருட்காட்சி

68பார்த்தது
கோவையில் களைகட்டும் கோவை அரசுப்பொருட்காட்சி


கோவை மாவட்டத்தில் கோடை விடுமுறையின் போது அரசு பொருட்காட்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது என்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிலும் அரசு பொருட்காட்சியானது கோவை வ. உ. சி மைதானத்தில் மே 29-ந் தேதி முதல் தொடங்கி 45 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த பொருட்காட்சி நடைபெறும். பொருட்காட்சிக்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 15 ரூபாயும், குழந்தைகளுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

மேலும், மாலை நேரத்தில் மக்கள் அனைவரும் சூடாக சாப்பிட உணவுகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், அலங்கார பொருட்கள் என பல்வேறு வகையான பொருட்கள் அனைத்தும் இந்த கண்காட்சியில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. எது எடுத்தாலும் 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் என நாம் குழந்தை பருவத்தில் பார்த்து வியந்தது போன்ற கடைகளும் இந்த பொருட்காட்சியில் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விரும்பும் ராட்டினம், குழந்தைகளுக்கான ரயில் வண்டி, மீன் ராட்டினம், பலூன் குதித்தல், சுற்று வண்டி என பல்வேறு வகையான விளையாட்டுகள் இந்த கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி