கஞ்சா விற்ற வாலிபர் சிக்கினார்

56பார்த்தது
கஞ்சா விற்ற வாலிபர் சிக்கினார்
கோவை ரத்தினபுரி போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது கண்ணப்ப நகர் ரயில்வே பாலத்தின் அடியில் நின்றிருந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரித்தனர். அதில் அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்ற கோவை ரத்தினபுரி தயிர் இட்டேரி ரோட்டை சேர்ந்த அம்புரோஷ்(25) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக சிறு, சிறு பொட்டலங்காக வைத்திருந்த 142 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி