பார் ஊழியரிடம் பணம் பறித்த மெக்கானிக் கைது!

80பார்த்தது
பார் ஊழியரிடம் பணம் பறித்த மெக்கானிக் கைது!
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் யோகநாதன்(30). இவர் ரத்தினபுரியில் உள்ள ஒரு டாஸ்மாக்கில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை யோகநாதன் பாரை சுத்தம் செய்து கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் மதுபாட்டில் கேட்டிருக்கிறார் அதற்கு யோகநாதன் மதியம் 12 மணிக்கு தான் பார் திறக்கும் என கூறியிருக்கிறார். இதனால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி யோகநாதன் இடம் 300 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து யோகநாதன் இரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, கருணாநிதி நகரைச் சேர்ந்த முத்துப்பாண்டி(28) என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி