பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் மே தின விழா

69பார்த்தது
கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் பல்வேறு வகையான சமுதாய பணிகளை செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக உழைக்கும் தொழிலாளர்களை போற்றி மகிழும் உழைப்பாளர் தின விழா கொண்டாட்டம் உடையாம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கெளரி சங்கர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தன்னுடைய கடும் உழைப்பால் உயர்ந்தும் பல்வேறு சமுதாய பணிகளை செய்து பொதுமக்களுக்கு சேவையாற்றி வரும் தூய்மை பணியாளர்கள்-பேக்கரி ஊழியர்கள் -பெயிண்ட் தொழிலாளர்கள் -உணவு வழங்கும் தொழிலாளர்கள்-செக்யூரிட்டி தொழிலாளிகள் -பேருந்து ஓட்டுநர், நடத்துனர்கள் -ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு உழைப்பாளர் விருதுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் சமூக சேவகர் அகஸ்டீன், செளரிபாளையம் கத்தோலிக்க தேவாங்க நலச்சங்க செயலாளர் பாபு கென்னடி -பொருளாளர் சகாயராஜ் , சமூக சேவகர்கள் சக்திவேல், பாலசுப்பிரமணியம், குணசேகரன், கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உழைப்பாளர் தின வாழ்த்துரை வழங்கினார்கள். கோவை மாநகராட்சி முன்னாள் மாமன்ற உறுப்பினர் தோழர் இராமமூர்த்தி  விருதாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு, கார வகைகளுடன் இயற்கை நூடுல்ஸ் பாக்கெட்டுகளை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி