முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கு - டிடிவி தினகரன் கண்டனம்

81பார்த்தது
முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கு - டிடிவி தினகரன் கண்டனம்
முன்னாள் எம்எல்ஏ வீரபாண்டி எஸ்.கே.செல்வம் மீது போலியான புகாரில் பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், சேலம் வீரபாண்டி திமுக ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர் அளித்த புகாரில் அமமுக பொருளாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.கே.செல்வம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பூலாவரி ஊராட்சியில் குடிநீர் தேவைக்காக பைப்லைக் அமைக்கும் பணியை வெண்ணிலா சேகர் தடுத்து நிறுத்தியுள்ளார்.

இது பற்றி வீரபாண்டி எஸ்.கே.செல்வம் மனைவியும், பூலாவரி ஊராட்சி தலைவருமான ராதா ராணி வீரபாண்டி ஒன்றிய ஆணையாளரிடம் மனு அளித்துள்ளார். மக்கள் பணியை தடுத்து நிறுத்திய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கத்தவறிய காவல்துறை, எஸ்.கே.செல்வம் மீது அளிக்கப்பட்ட போலி புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து அவசரம் அவசரமாக மக்கள் பணியாற்றும் எதிர்க்கட்சி உள்ளாட்சி பிரதிநிதிகளை முடக்க முயற்சிப்பது நியாயமில்லை என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி