பல்கலைக்கழகத்தைக் கைப்பற்றிய அமெரிக்க மாணவர்கள்

56பார்த்தது
பல்கலைக்கழகத்தைக் கைப்பற்றிய அமெரிக்க மாணவர்கள்
பலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்திவந்த கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள் அங்குள்ள , ஹாமில்டன் அரங்கை நேற்று அதிகாலை கைப்பற்றினர். அவர்கள் மேஜைகள் , நாற்காலிகள், இரும்பு பொருள்களை நுழைவு வாயிலில் வைத்து காவல்துறையினர் உள்ளே வராதபடி தடுப்புகள் அமைத்து போராட்டத்தை தொடர்ந்தனர். அதனுடன், ஜன்னல்களில் பாலஸ்தீன நாட்டின் கொடிகளையும் பறக்கவிட்டனர். இதனைத் தொடர்ந்து, அனைத்து மாணவர்களும் ஹாமில்டன் அரங்குக்கு வருகை தந்து போராட்டத்தில் இணையுமாறு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அழைப்பு விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி