நூதன முறையில் பைக் திருட்டு!!

70பார்த்தது
நூதன முறையில் பைக் திருட்டு!!
கோவை சிங்காநல்லூர் காமராஜர் ரோடு பகுதியில் உள்ள பழைய பைக் விற்பனை நிலையத்தில் நூதன முறையில் பைக் திருட்டு நடந்துள்ளது. சோதனை ஓட்டம் என்ற பெயரில் ஒரு வாலிபர் விலையுயர்ந்த KTM பைக்கை திருடிச் சென்றுள்ளார். சம்பவம் குறித்து கிடைத்த விவரங்களின்படி, சிங்காநல்லூர் காமராஜர் ரோடு பகுதியைச் சேர்ந்த சபரி ஸ்ரீனிவாசன் (34) என்பவர் அங்குள்ள பழைய பைக் விற்பனை நிலையத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். செப்டம்பர் 3 அன்று, டிப் - டாப் உடையணிந்த ஒரு வாலிபர் கடைக்கு வந்து KTM பைக் வாங்க விரும்புவதாகக் கூறினார். கடை ஊழியர்கள் அவருக்கு விலையுயர்ந்த KTM பைக்கை காட்டினர். வாலிபர் பைக்கை சோதனை ஓட்டம் செய்ய விரும்பினார். மேலாளர் சபரி ஸ்ரீனிவாசன் அனுமதி அளித்தார். பாதுகாப்பிற்காக கடை ஊழியர் நவீனை உடன் செல்லும்படி கூறினார். வாலிபர் நவீனை பின்னால் அமர வைத்து பைக்கை ஓட்டிச் சென்றார். சிறிது தூரம் சென்றதும், தான் தனியாக ஓட்டிப் பார்க்க வேண்டும் எனக் கூறி நவீனை காமராஜர் ரோட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் அருகில் இறக்கி விட்டார். அதன் பின்னர் அவர் திரும்பி வரவில்லை. இந்த நூதன திருட்டு குறித்து மேலாளர் சபரி ஸ்ரீனிவாசன் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள CCTV கேமராக்களை ஆய்வு செய்து திருடனைத் தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி