பொள்ளாச்சி முத்து குமாரசாமி லே-அவுட் பகுதியைசேர்ந்தவர் செல்வகுமார் கோவை தெற்கு மாவட்ட
பாஜக தகவல் தொழில்நுட்ப அணி தலைவராக
பதவி வகித்து வருகிறார்.
இவர் தமிழக முதல்வர் குறித்துசமூக வலைதளங்களில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து நேற்று கோவை தெற்கு மாவட்ட
திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஆறுமுகசாமி என்பவர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் செல்வகுமாரை கைது செய்து, அவர் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சமூக வலைதளத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.