ஆனைமலையில் 5 அடி நீள மலைப்பாம்பு மீட்பு!

64பார்த்தது
ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் செல்லும் வழியில் நேற்று இரவு எட்டு மணி அளவில் அவ்வழியாக சென்ற ஒருவர் மலைப்பாம்பு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சுமார் ஐந்து அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட மலைப்பாம்பு பத்திரமாக டாப்ஸ்லிப் வனப்பகுதியில் விடப்பட்டது. மாசாணி அம்மன் கோவில் செல்லும் வழியில் மலைப்பாம்பு தென்பட்டது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி