திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் ரயில் சேவை நீட்டிப்பு!!

70பார்த்தது
திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் ரயில் சேவை நீட்டிப்பு!!
தெற்கு ரயில்வே நிர்வாகம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவைகளை அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் வாராந்திர ரயில் சேவைகள் நீட்டிக்கப்படவுள்ளன. இதன்படி, திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் விரைவு ரயில் சேவை நவம்பர் 25 வரையும், சென்னை எழும்பூர்-திருநெல்வேலி விரைவு ரயில் சேவை நவம்பர் 29 வரையும் நீட்டிக்கப்படும். மேலும், இந்த நீட்டிக்கப்பட்ட ரயில் சேவைகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாகவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி