ஆற்றை கடக்க முயன்றவர் பலி!

65பார்த்தது
ஆற்றை கடக்க முயன்றவர் பலி!
காரமடை அருகே தோண்டை கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (52). அவர் பரளி பவர் ஹவுஸில் மெக்கானிக்காக பணி புரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் (செப்.16) வெள்ளியங்காடு அருகே பவானி ஆற்றை நீந்தி கடக்க முயன்றார். இதில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். காரமடை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி