தனியார் ரிசார்ட் ஆக்கிரமிப்பு - அவதிப்படும் மக்கள்!

84பார்த்தது
தனியார் ரிசார்ட் ஆக்கிரமிப்பு - அவதிப்படும் மக்கள்!
கோவை ஆனைகட்டி தெக்கலூரில் தனியார் ரிசார்ட் நிறுவனம் பொதுப்பாதையை ஆக்கிரமித்ததால், அப்பகுதி மக்கள் கம்பிக்கு அடியில் புகுந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக, தெக்கலூர் மக்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் கோரிக்கை மனு ஒன்றை நேற்று (செப்.,12) அளித்துள்ளனர்.

அந்த மனுவில், புல எண் 1037, 1038/6, 1039/2, 3, 6, 8, 1021/6, 1022, 1023, 893 ஆகியவற்றில் உள்ள நீர்நிலை மற்றும் அரசு புறம்போக்கு நிலத்தை (சுமார் 20 ஏக்கர்) ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சிகள் நடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எஸ். ஆர். ரிசார்ட் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த சில நாட்களாக இராட்சத மண் தோண்டும் இயந்திரங்கள் மூலம் இரவு பகலாக மண் மற்றும் பாறைகளை கடத்தி வருவதாகவும், இதனால் நீர்வழி பாதைகள் சிதைக்கப்படுவதாகவும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், தடுப்பணைகள் உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்தைப் பார்வையிட்டு, கள ஆய்வு செய்ய வேண்டும் என்றும், ஆக்கிரமிப்புகளைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி