கோவை: தடுப்பணையில் முழ்கி 3 மாணவர்கள் பலி

56பார்த்தது
கோவை: தடுப்பணையில் முழ்கி 3 மாணவர்கள் பலி
கோவை பேரூர் பச்சாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரவீன்(17), கவின்(16), தக்ஷன்(17). 12ம் வகுப்பு படித்து வரும் இவர்கள் இன்று(ஏப்.24) முண்டந்துறை தடுப்பணையில் குளிப்பதற்காக சென்றனர். அங்கு நீச்சல் தெரியாததால் மூன்று பேரும் நீரில் மூழ்கி பலியாகினர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மாணவர்களின் உடல்களை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காருண்யா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி