நயினார் விவகாரம்: ED விசாரணை கோரிய மனு தள்ளுபடி

58பார்த்தது
நயினார் விவகாரம்: ED விசாரணை கோரிய மனு தள்ளுபடி
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர்களிடம் தாம்பரத்தில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் நெல்லையில் சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளர் ராகவன், இந்த வழக்கை அமலாக்கத்துறைக்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு செல்லப்பட்ட பணம், சட்ட விரோத பணம் பரிமாற்ற தடைச் சட்டத்தில் வராது என அமலாக்கத்துறை பதில் மனு அளித்ததால், நீதிபதிகள் ராகவன் அளித்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

தொடர்புடைய செய்தி