முன் பகை.. கொலை முயற்சியில் இறங்கிய சகோதரர்கள்

62பார்த்தது
முன் பகை.. கொலை முயற்சியில் இறங்கிய சகோதரர்கள்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் களத்தூர் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (24). கூலித் தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விஜயராகவன் (26) என்பவருக்கும் கடந்த ஊர் திருவிழாவின்போது நடந்த தகராறு பகையாக வளர்ந்துள்ளது. பகை முடிக்க இந்த திருவிழா வரை காத்திருந்த விஜயராகவன், தனது சகோதரன் பரமேஸ்வரன் (21) என்பவரோடு இணைந்து திருவிழாவின் போது கத்தியால் குத்த முயற்சித்துள்ளார். இதில் காயமடைந்த சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி