பாஜக ஐ.டி விங் நிர்வாகிகளை கடுமையாக எச்சரித்த தமிழிசை.!

59பார்த்தது
பாஜக ஐ.டி விங் நிர்வாகிகளை கடுமையாக எச்சரித்த தமிழிசை.!
பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் இன்று (ஜூன் 6) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் எதிர்க்கட்சி ஐடி விங்கில் செயல்படுபவர்களை எச்சரிப்பது போலவே, உட்கட்சியின் ஐடி விங்கை நான் எச்சரிக்கிறேன். கட்சியின் தலைவர்கள் குறித்து எழுதும்போது, ஒழுங்காக எழுத வேண்டும். இல்லையஎன்றால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை முன்னாள் தலைவர் என்கிற முறையில் கூறிக்கொள்கிறேன். ஆளுநர் பதவியை விட்டு வந்தது குறித்து நானே கவலைப்படவில்லை, உங்களுக்கு என்னடா கவலை?” என அவர் கோபத்துடன் பேசினார்.

தொடர்புடைய செய்தி