கும்பகோணம் அருகே வசிக்கும் பாலமுருகன் - சங்கீதா தம்பதிக்கு 38 நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்த நிலையில் குழந்தையுடன் அரியலூரில் உள்ள தந்தை வீரமுத்து வீட்டிற்கு சங்கீதா வந்தார். அங்கு மூடநம்பிக்கை காரணமாக குழந்தையை வீரமுத்து கொலை செய்தார். விசாரணைக்கு பின் போலீசார் அவரை கைது செய்தனர். இதனிடையில் குழந்தையின் தாய், சம்பவம் நடந்த ஜூன் 14 இரவு பச்சிளம் குழந்தையை காணவில்லை என பதற்றத்துடன் தேடியிருக்கிறார். கொலை செய்த வீரமுத்துவோ ஒன்றும் தெரியாதவர் போல கூடவே இருந்து நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.