16 மின்சார ரயில்களில் சேவை மாற்றம்

59பார்த்தது
16 மின்சார ரயில்களில் சேவை மாற்றம்
சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கத்தில், அரக்கோணம் யார்டில் பொறியியல் பணி காரணமாக, 16 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

அதன் விவரம்: சென்னை சென்ட்ரல் - அரக்கோணத்துக்கு ஆக. 30, 31 ஆகிய தேதிகளில் காலை 8. 20, 9. 10, 11 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், திருவள்ளூர் - அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.

சென்னை சென்ட்ரல் - திருத்தணிக்கு ஆக. 30, 31 ஆகிய தேதிகளில் காலை 10, முற்பகல் 11. 45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், திருவள்ளூர் - திருத்தணி இடையே பகுதி ரத்துசெய்யப்பட உள்ளன.

திருத்தணி - சென்னை சென்ட்ரலுக்கு ஆக. 30-ம் தேதி காலை 10. 15 மணிக்கும், ஆக. 30, 31, செப். 1 ஆகிய தேதிகளில் நண்பகல் 12. 35 மணிக்கும் புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள், திருத்தணி - திருவள்ளூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.

அரக்கோணம் - சென்னை சென்ட்ரலுக்கு ஆக. 30, 31, செப். 1 ஆகிய தேதிகளில் முற்பகல் 11. 15, நண்பகல் 12, மதியம் 1. 50 ஆகிய நேரங்களில் புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள், அரக்கோணம் - திருவள்ளூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.

திருத்தணி - சென்னை சென்ட்ரலுக்கு ஆக. 31, செப். 1 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2. 20 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், திருத்தணி - திருவள்ளூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி