செந்தில்பாலாஜி அமைச்சராவது குறித்து முதல்வர் முடிவு செய்வார்

74பார்த்தது
செந்தில் பாலாஜி அமைச்சராவது குறித்து முதல்வர் முடிவு செய்வார் என்று டி. கே. எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில், திமுக செய்தி தொடர்பாளர் டி. கே. எஸ். இளங்கோவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அமலாக்கத்துறை திட்டமிட்டு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வந்தது, மத்திய அரசு தங்களுக்கு கீழ் உள்ள துறைகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தியதுள்ளதை நிரூபித்துள்ளது. பாஜக வாஷிங் மெஷினில் இணைந்தால் அவர்கள் தூய்மையாகிவிடுவார்கள். அப்படி குற்றம்சாட்டப்பட்ட பலருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. செந்தில் பாலாஜிக்கு காலதாமதாக வழங்கிய நீதியாகவே இதை கருதுகிறேன்.

காரணம், அவருக்கு அந்த உரிமையை வழங்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை. ஆனால், அமலாக்கத் துறை வலியுறத்தலின் காரணமாக, ஜாமீன் வழங்கி இவ்வளவு காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது என்று நான் கருதுகிறேன் என அவர் கூறினார்.

அப்போது அவரிடம், செந்தில் பாலாஜி அமைச்சர் ஆவது குறித்து கேட்கப்பட்டக் கேள்விக்கு, அதுகுறித்து முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும். அமைச்சர் ஆவதற்கு தடையில்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது என்று அவர் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி