மாவட்ட ஆட்சியர்கள் உடன் தலைமைச் செயலர் 3 நாள் ஆலோசனை

58பார்த்தது
மாவட்ட ஆட்சியர்கள் உடன் தலைமைச் செயலர் 3 நாள் ஆலோசனை
மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஜூன் 11, 13 மற்று 15 ஆகிய மூன்று நாட்கள் மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்த உள்ளார்.

ஜூன் 11-ம் தேதி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்ப்டினம் திருவாரூர் ஆட்சியர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். தொடர்ந்து, ஜூன் 13-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில், கள்ளக்குறிச்சி, அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் உடன் ஆலோசனை நடத்துகிறார்.

ஜூன் 15-ம் தேதி திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, சிவகெங்கை மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலர் அறை அருகில் உள்ள கூட்ட அரங்கில் காலை 9. 30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தொடர்புடைய செய்தி