தங்கம் விலை உயர்வு..!

566பார்த்தது
தங்கம் விலை உயர்வு..!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது. இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் போர் காரணமாக கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி முந்தைய நாள் விலையில் விற்பனையாகியது. அதாவது சென்னையில் வெள்ளிக்கிழமை 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ. 47, 280-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ. 5, 910-க்கும் விற்பனை செய்யப்பட்டது இந்த நிலையில், இன்று தங்கம் அதிரடியாக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 47, 360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 10 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ. 5, 920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி