அமலாக்கத்துறை சோதனை: என். ஆர். இளங்கோ குற்றச்சாட்டு

72பார்த்தது
அமலாக்கத்துறை சோதனை: என். ஆர். இளங்கோ குற்றச்சாட்டு
அமலாக்கத்துறை சோதனை மூலம் திமுக மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார். 

அமைச்சர் கே.என். நேரு வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோ; அரசியல் உள்நோக்கத்துடன் தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. சிறுபான்மையினர் மக்களுக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குரல் கொடுப்பது ஒன்றிய அரசால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட விவகாரத்தில் முதலமைச்சரின் நடவடிக்கையை ஒன்றிய அரசால் எதிர்கொள்ள முடியவில்லை. முதலமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முடியாமல், அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு ஏவிவிடுகிறது. 

அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மூலம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்த ஒன்றிய பா.ஜ.க. முயற்சி செய்கிறது. ஒன்றிய அரசின் நடவடிக்கை ஹிட்லரின் சர்வாதிகார போக்கு போன்று உள்ளது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் குழப்பம் உண்டாக்க அமலாக்கத்துறையை ஏவிவிடுவார்கள். ஒன்றிய அரசின் பழிவாங்கும் போக்கை சட்டரீதியாக திமுக எதிர்கொள்ளும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி