மாயமான சிறுமியை ஏ. ஐ. உதவியுடன் தேடும் போலீசார்
சென்னையில் 13 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன குழந்தையை ஏ. ஐ. , தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடிக்க காவல்துறை முயற்சி எடுத்துள்ளது. 2011இல் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த குழந்தை கவிதா (2) காணாமல் போனது. ஆண்டுகள் கடந்து ஓடினாலும் குழந்தையை தேடுவதை குடும்பத்தினர் நிறுத்தவில்லை. ஏ. ஐ. உதவியுடன் கவிதாவின் படத்தை 14 வயது தோற்றத்தில் வடிவமைத்த போலீசார் போஸ்டராக வெளியிட்டு சிறுமியை தேடி வருகின்றனர்.