பெரம்பூர் - Perambur

பிரபல ரவுடி என்கவுண்டர்: போலீஸ் விளக்கம்

சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெருநகர காவல்துறையின் வடக்கு மண்டல இணை ஆணையாளர் பிரவேஷ் குமார், காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், வாகன தணிக்கையின்போது ரவுடி காக்கா தோப்பு பாலாஜி வந்த வாகனத்தில் கஞ்சா இருந்தது. இதனை கண்காணித்த போலீசார் அப்போது கஞ்சாவுடன் தப்பி சென்றவர்களை தான் போலீசார் விரட்டி சென்று சுற்றிவளைத்தனர். அச்சமயத்தில் காக்கா தோப்பு பாலாஜி, போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றார். இதனால் தான் போலீசார் பதில் தாக்குதல் நடத்தும் சூழல் உருவானது. இந்த சம்பவத்தில் காக்கா தோப்பு பாலாஜியின் இடது மார்பில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் படுகாயமடைந்த நபரை சோதிக்கும்போது உயிர் இருந்தது. இந்த தாக்குதலுக்கு பிறகே அந்த நபர் காக்கா தோப்பு பாலாஜி என்பது தெரியவந்தது. இவர் மீது 58 வழக்குகள் நிலுவையில் உள்ளன. காக்கா தோப்பு பாலாஜியுடன் உடன் காரில் வந்த மற்றொரு நபரைப் பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரில் இருந்து 10 கிலோ கஞ்சா மற்றும் அரிவாள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன எனத் தெரிவித்தார்.

வீடியோஸ்


சென்னை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பகுஜன் சமாஜ் கட்சி குற்றச்சாட்டு
Sep 18, 2024, 14:09 IST/எழும்பூர்
எழும்பூர்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பகுஜன் சமாஜ் கட்சி குற்றச்சாட்டு

Sep 18, 2024, 14:09 IST
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய நபர்களை விரைந்து கைது செய்யக் கோரி, தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு கொடுக்க அனுமதி வேண்டி, தலைமைச் செயலகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் முதல்வரின் தனிச் செயலரை இன்று (செப்.,18) சந்தித்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை 5ம் மர்ம கும்பல் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் தற்போது வரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தலைமறைவாக இருக்கும் ரவுடிகளான சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய அரசியல் பிரமுகர்கள், தொடர்புடைய நபர்கள் மற்றும் குற்றம் சுமத்தப்பட்டு தலைமறைவாக உள்ள நபர்களை விரைந்து கைது செய்யக்கோரி தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு கொடுக்க அனுமதி வேண்டி தலைமை செயலகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் முதலமைச்சரின் தனி செயலரை சந்தித்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பகுஜன் சமாஜ் கட்சி ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன், ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் காவல்துறையின் விசாரனையில் தங்கள் கட்சிக்கு திருப்தியில்லை என தெரிவித்தார்.