பெரியாரை தொடாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது - உதயநிதி

85பார்த்தது
பெரியாரைத் தொடாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலினிடம், அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய் பெரியார் பிறந்த நாளில் அவரது சிலைக்கு மாலையிட்ட நிகழ்வைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பப்பட்டபோது, நல்ல விஷயம் தான். யாராக இருந்தாலும் தமிழ்நாட்டில் பெரியாரைத் தாண்டி, பெரியாரை மீறி, பெரியாரைத் தொடாமல் அரசியல் செய்ய முடியாது. நண்பர் விஜய்க்கு என் வாழ்த்துகள் என பதிலளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி