போதையில் இளைஞர் ரகளை: போலீசார் விசாரணை

59பார்த்தது
போதையில் இளைஞர் ரகளை: போலீசார் விசாரணை
சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே போக்குவரத்து காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது , இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரை மடக்கி சோதனை செய்ததில் அந்த நபர் மது அருந்தி விட்டு வாகனத்தை இயக்கியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போக்குவரத்து காவலர்கள் அந்த நபருக்கு அபராதம் விதிக்க முற்பட்டபோது காவல்துறையிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து போக்குவரத்து காவல் துறையினர் கொருக்குப்பேட்டை சட்ட ஒழுங்கு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த நபரிடம் விசாரிக்க முற்பட்டபோது காவல் உதவி ஆய்வாளரையும் அந்த இளைஞர் ஒருமையில் பேசி அராஜகத்தில் ஈடுபட்டார்.

இதன் தொடர்ச்சியாக அந்த இளைஞர் மீது வழக்கு பதிந்த காவல்துறையினர் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டது கொருக்குப்பேட்டை ராமதாஸ் நகரை சேர்ந்த 26 வயது சுரேஸ் என்பதும் பெரம்பூரில் இருக்கும் தனது மனைவி வீட்டிற்கு மது போதையில் வாகனத்தை ஓட்டிக் கொண்டு செல்லும் வழியில் காவல்துறையினரிடம் பிடிபட்டதும் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி