அதிமுகவை பார்த்து ஆளுங்கட்சிக்கு பயம் வந்துவிட்டது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சென்னையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை பார்த்து ஆளுங்கட்சிக்கு பயம் வந்துவிட்டது. அதனால் தான் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்தும் நாட்கள் கூட குறைந்திருக்கிறது. இதுவே அதிமுகவின் எழுச்சி. 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியில் அமரும் என தெரிவித்தார். சட்டப்பேரவை நாட்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.
இதற்கு காரணம் பயம்தான். அதிமுகவை பார்த்து ஆளுங்கட்சிக்கு பயம் வந்துவிட்டது. இரண்டு நாட்கள் மட்டும் சட்டப்பேரவையை நடத்தியுள்ளார்கள். அதில் ஒரு நாள் மட்டும் எதிர்க்கட்சிகள் பேச அனுமதி. அதுவும் பிரதான எதிர்க்கட்சியான எங்களுக்கு 10 நிமிடங்கள் தான் அனுமதி. சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை என்பார்கள். ஆனால் நான் பேசும்போது அதனைத் துண்டிப்பார்கள். சட்டப்பேரவையில் நான் பேசியதை ஒளிபரப்பி இருந்தால் திமுக அரசே இருந்திருக்காது. 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என அக்கட்சியின் எம். பி. கனிமொழி கூறுகிறார். இது திமுகவின் பகல் கனவு. 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியில் அமரும் என அவர் பேசினார்.