மைலாப்பூர் - Mylapore

கவுரவ விரிவுரையாளர் ஊதியத்தை உயர்த்த ராமதாஸ் கோரிக்கை

கவுரவ விரிவுரையாளர் ஊதியத்தை உயர்த்த ராமதாஸ் கோரிக்கை

பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைப்படி கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை ரூ. 50, 000 ஆக உயர்த்த வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு அரசால் வழங்கப்படும் ஊதியம் மதிப்பூதியம் அல்ல. அவமதிப்பூதியம் என்றும், உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப் படும் அவர்களின் ஊதியத்தை ரூ. 50, 000 ஆக உயர்த்த வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்திருக்கிறது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய தமிழக அரசு, வழக்கமாக வழங்க வேண்டிய ஊதியத்தைக் கூட கடந்த 3 மாதங்களாக வழங்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. கவுரவ விரிவுரையாளர்களுக்கு பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் சமூகநீதியை வழங்கும் வகையில், அவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவையை இம்மாத இறுதிக்குள் வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி, பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைப்படி கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை ரூ. 50, 000 ஆக உயர்த்த வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையை செயல்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

வீடியோஸ்


சென்னை
மத்திய பட்ஜெட்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
Jul 21, 2024, 07:07 IST/சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி

மத்திய பட்ஜெட்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

Jul 21, 2024, 07:07 IST
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் உள்ள நிதியை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை பட்ஜெட்டில் நிறைவு செய்ய வேண்டும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசின் இந்த 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட் ஜூலை 23 தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை வலியுறுத்தி, தனது சமூக வலைதளப்பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டிருப்பதாவது "நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில், மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்டாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை ஒதுக்க வேண்டும். தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மேம்பால விரைவுச்சாலை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். பத்தாண்டுகளாக வருமான வரிச்சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தர குடும்பங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதலை அளிக்க வேண்டும். தமிழகத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்த போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.