மைலாப்பூர் - Mylapore

மாநகர பேருந்தில் முதல்வர் பயணம்: மகளிரிடம் உரையாடல்

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மாநகரப் பேருந்தில் பயணம் செய்து, மகளிர் விடியல் பயணத் திட்டம் குறித்து பயணிகளிடம் உரையாடினார். அப்போது முதல்வர், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம், முறையாக பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி பெண் பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று நான்காண்டுகள் நிறைவு பெற்று, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இன்று தலைமைச் செயலகம் வருகைதந்த தமிழக முதல்வர், தலைமைச் செயலகத்திலிருந்து சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ள விழாவுக்கு செல்லும் வழியில், சென்னை வள்ளலார் நகரிலிருந்து விவேகானந்தர் இல்லம் வரை செல்லும் 32-B மாநகரப் பேருந்தில் அரசினர் தோட்டம் அருகில் உள்ள ஓமந்தூரார் பேருந்து நிறுத்தத்திலிருந்து பயணம் செய்து முதல்வர் பொறுப்பேற்ற முதல் நாள் அறிவித்த 5 திட்டங்களில் ஒன்றான “மகளிர் விடியல் பயணம் திட்டத்தின்” கீழ் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளிடம் உரையாடினார். அப்போது, இத்திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருவதற்கும் நான்காண்டு முடிவடைந்து ஐந்தாண்டும் ஆண்டு தொடங்குவதையொட்டி முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து மீண்டும் இந்த நல்லாட்சி தொடர வேண்டும் என்றும், தங்களது விரும்பத்தை தெரிவித்துக்கொண்டனர்.

வீடியோஸ்


சென்னை