சூளைமேடு, சித்ரா அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி, 56; ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்.
செங்கல்பட்டு மாவட்டம், பாலுார் பகுதியில் நிலங்கள் வாங்குவதற்காக, கடலுார் மாவட்ட பா. ஜ. , துணை தலைவர் சிவகுமாரிடம், 3 கோடி ரூபாய் கடனாக வாங்கி உள்ளார்.
பின், 14. 8 ஏக்கர் அளவுடைய அந்நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்து, அவற்றை விற்று தரும்படியும், அதற்கான கமிஷன் தொகை தருவதாகவும் சிவகுமாரிடம் கேட்டுள்ளார்.
இந்நிலையில் சிவகுமார், பாலுார் நிலத்தை தன் பெயருக்கு எழுதி தரும்படி, அடியாட்களை நேற்று முன்தினம் அழைத்து சென்று, மூர்த்தியை மிரட்டியுள்ளார்.
இது குறித்து மூர்த்தி புகாரின்படி வழக்கு பதிந்த சூளைமேடு போலீசார், மிரட்டல் விடுத்த, சிவகுமார் என்பவரை கைது செய்தனர். மேலும், வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை தேடுகின்றனர்.