ரூ.26 கோடியில் 16 இடங்களில் நடைபயிற்சி பாதைகள்

69பார்த்தது
தேனாம்பேட்டை உள்ளிட்ட நான்கு மண்டலங்களில் 26 கோடியில் 16 இடங்களில் நடைப்பயிற்சி பாதைகள் அமைக்க சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் ஆர். பிரியா தலைமையில், ஆணையர் ஜெ. குமரகுருபரன், துணை மேயர் மு. மகேஷ் குமார் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

> மாநகராட்சியின் 289 குப்பை அகற்றும் வாகனங்களில் ரூ. 1. 31 கோடியில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி, ஜிஆர்எஸ் தொழில்நுட்பத்தில் 3 ஆண்டுகளுக்கு கண்காணிக்க மன்றத்தில் அனுமதி வழங்கப்படுகிறது.

> மாநகராட்சியின் 4, 5, 9, 12 ஆகிய மண்டலங்களில் 16 இடங்களில் ரூ. 26. 60 கோடியில் நடைபயிற்சி பாதைகள் அமைக்க தயாரிக்கப்பட்ட திட்டமதிப்பீட்டுக்கு மன்றத்தில் அனுமதி வழங்கப்படுகிறது.

> கொளத்தூர் புதிய தாலுகாவாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய தாலுகா அலுவலகமானது மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கட்டிடத்தில் 2 ஆண்டுகள் வாடகை அடிப்படையில் வழங்க இந்த மன்றம் அனுமதிக்கிறது.

> சென்னை மாநகரில் ரூ. 8. 46 கோடியில் 81 இடங்களில் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைக்க இந்த மன்றம் ஒப்புதல் அளிக்கிறது. என்பது உள்ளிட்ட 54 தீர்மானங்கள் இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி