ஆசிரியப் பெருமக்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள் - முதல்வர்

78பார்த்தது
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, பாடப்புத்தகங்களைக் கடந்து மாணவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள் என முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களுக்கு கல்வியறிவு புகட்டுவதோடு அவர்களுக்கு எதிர்கால இலக்குகளையும் அடையாளம்காட்டி வெற்றித்திசையை சுட்டிக்காட்டிடும் அறிவுச்சுடர்களான ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது அன்பான ஆசிரியர்தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

கல்வி கற்றிடின் கழிந்திடும் மடமை
கற்பதுவே உன் முதற்கடமை

என்ற பாவேந்தரின் வார்த்தைகளைப் பசுமரத்தாணிபோல மாணவர்களின் மனதில் பதியச் செய்து பார்போற்றும் நல்லவராக பொதுநலச்சிந்தையில் புடம்போட்ட தங்கங்களாக மாணவர்களை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள்

ஓர்ஆசிரியரின் எழுதுகோல் குனிகிறபோதெல்லாம் அங்கே ஒருதலைமுறை தழைத்தோங்கி தலைநிமிர்ந்து நிற்கும் என்பது முற்றிலும் உண்மை சமூகநீதி காத்து சமுதாய ஏற்றத்திற்கான மாற்றத்தையும் மலர்ச்சியையும் வகுப்பறைகளில் பேணிக்காப்பவர்கள் ஆசிரியர்கள் இத்தகைய சிறப்பான பொறுப்பினை சிரமேற்கொண்டு உளிபடாமல் துளி சிதறாமல் எதிர்கால உலகத்தைச் சிரத்தையாய்ச் செதுக்கும் ஆசிரியச் சிற்பிகளுக்கு எனது உளங்கனிந்த ஆசிரியர்தின நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி