சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்கள் யார்? - அன்புமணி

81பார்த்தது
சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்கள் யார்? - அன்புமணி
சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்கள் யார்? என்பதை மக்கள் புரிந்து கொள்ள சில உண்மைகள் என தமிழக முதல்வர் ஸ்டாலினின் சமூகவலைதளப் பதிவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

அவருடைய சமூகவலைதளப் பதிவில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதையே நானும் சொல்கிறேன். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்.

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்த பிறகும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் சமூகநீதிக்கு துரோகம் இழைப்பது யார்?

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நச்சுசாராயம் குடித்து உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையினர் பட்டியலின மக்கள். நச்சுசாராய உயிரிழப்புகள் குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்காக சி. பி. ஐ. விசாரணைக்கு ஆணையிட முடியாது என்று கூறி குற்றவாளிகளை பாதுகாப்பது எந்த கட்சி அரசு?

ஆகவே, விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களே. சிந்திப்பீர், செயல்படுவீர், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்.! என அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி