சவுக்கு சங்கர் கையில் காயம்.. புதிய வீடியோ

16853பார்த்தது
பெண் காவலர்களை தகாத முறையில் பேசிய வழக்கில், சவுக்கு சங்கர் கடந்த 4ஆம் தேதி தேனியில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு போலீசாரால் தாக்கப்பட்டு சவுக்கு சங்கருக்கு கை முறிவு ஏற்பட்டதாக அவரது வழக்கறிஞர் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், கஞ்சா வைத்திருப்பதாக சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட வழக்கு குறித்த விசாரணைக்காக இன்று அவர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரது கையில் முறிவு ஏற்பட்டு கட்டுபோட்டிருப்பது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி