4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

57பார்த்தது
4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 31) காலை 10 மணிவரை தேனி, நெல்லை, திருப்பூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வலுவான தரைக்காற்று 30-40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மத்திய வங்கக்கடலில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

தொடர்புடைய செய்தி