3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

56பார்த்தது
கோயம்புத்தூர், திருப்பூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று (ஜுலை 27) காலை 10 மணிக்குள் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

தொடர்புடைய செய்தி