நடிகர் விஷால் குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் சங்கத் தலைவர் நாசர் அளித்த புகாரின் பேரில் யூடியூபர் சேகுவேரா மற்றும் 2 யூடியூப் சேனல்கள் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 'மதகஜராஜா' பட விழாவில் பங்கேற்றபோது விஷாலின் கைகள் நடுங்கியது குறித்து அவதூறு பரப்பியதாக 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.